M3 சிப்செட் கொண்ட முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும். ஆப்பிள் நிறுவனம் அடுத்த தலைமுறை ஆப்பிள் சிலிகோன் சிப்செட்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் M2 சிப்செட்களின் மேம்பட்ட கட்டமைப்பை M3 பிராசஸர்களை ஆப்பிள் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி எதிர்வரும் மாதங்களில் புதிய M3 சிப்செட் கொண்ட மேக்புக் ஏர் மொடல் அறிவிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் வெளியிட்டு இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் M3 சிப்செட் கொண்ட டாப் என்ட் மேக்புக் ப்ரோ மற்றும் மேக் மினி மொடல்கள் எதிர்வரும் ஆண்டில் அறிமுகம் செய்யலாம் என்று தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“M3 சிப்செட் கொண்ட மேக் மினி வகை நிச்சயம் வெளியாகும் எனினும், இப்போதைக்கு இது வெளியாகாது..
எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இடைப்பகுதியில் M3 சிப்செட் கொண்ட 14-இன்ச் மற்றும் 16-இன்ச் மேக்புக் ப்ரோ மொடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.M3 சிப்செட் கொண்ட முதற்கட்ட சாதனங்கள் இந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படும்.
இதில் 13-இன்ச் மேக்புக் ப்ரோ, 13 இன்ச் மேக்புக் ஏர் மற்றும் 24-இன்ச் ஐமேக் மொடல்கள் இடம்பெற்று இருக்கும்.” என தெரிவித்துள்ளார்.இதேவேளை, புதிய ஆப்பிள் M3 சிப்செட்டை TSMC உற்பத்தி செய்யும் எனவும் இது 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய M2 சிப்செட்கள் 5 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.