ஆர்ஜன்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே தெரிவு

0
182

ஜேவியர் மிலேயின் போட்டியாளரான சர்ஜியோ மஸ்ஸா 44 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார். ஆர்ஜன்டினாவின் புதிய ஜனாதிபதியாக ஜேவியர் மில்லே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, நேற்று (19) இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின்படி, அவர் கிட்டத்தட்ட 56 வீதமான வாக்குகளைப் பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், ஜேவியர் மிலேயின் போட்டியாளரான சர்ஜியோ மஸ்ஸா 44 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மீள் கணக்கீடு செய்ய வேண்டும் என போட்டி வேட்பாளரின் ஆதரவாளர்கள் போராட்டங்களை ஆரம்பித்துள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here