ஆறாவது நாளாகவும் வைத்தியர்களின் வேலைநிறுத்தப்போராட்டம் தொடர்கிறது.

0
196

அரச வைத்தியர்கள் ஆரம்பித்துள்ள வேலைநிறுத்தப்போராட்டம் ஆறாவது நாளாகவும் தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர். இதனால் மலையகத்தில் உள்ள அரச வைத்தியசாலைகளின் பணிகள் இடம்பெறவில்லை. குறித்த வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக பெருந்தொட்டங்களில் வாழும் மக்கள் இன்றைய தினமும் சிகிச்சைக்காக வருகை தந்து ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர்.

பல தூர பிரதேசங்களில் இருந்து வருகை தந்த நோயாளர்கள் வெளி நோயாளர் பிரிவுகளில் மருந்து எடுக்க முடியாததன் காரணமாக பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பொருளாதார நெருக்கடியில் வாழும் பெருந்தோட்ட மக்கள் பெரும்பாலும் அரச வைத்தியசாலைகளையே நம்பியே சிகிச்சைக்காக வருகை தருகின்றனர். எனினும் இன்றைய தினமும் வைத்தியர்கள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் குதித்ததன் காரணமாக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக தூர பிரதேசங்களில் இருந்த வருகை தந்த மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர்.

டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் வெளிநோயாளர் பிரிவில் ஒருசில வைத்தியர்கள் மாத்திரம் சேவையில் ஈடுபட்டிருந்தனர். எனினும் வேலைநிறுத்தப்போராட்டம் காரணமாக மக்கள் இன்றைய தினம் மிகவும் குறைவாகவே சிகிச்சைக்காக வருகை தந்திருந்தனர் எனினும் அதிகமான வைத்தியர்கள் வராததன் காரணமாக குறிப்பிட்ட ஒரு சில நோய்களுக்காக சிகிச்சைக்காக வந்த மக்கள் சிகிச்சை பெற முடியாத நிலைமையே காணப்பட்டன.
அரச வைத்திய உத்தியோகஸ்த்தர்களின் சங்கம் இடம்மாற்ற சபைக்கு அப்பால் 500 வைத்தியர்களை இணைப்பு செய்துள்ளமைக்கும் மேலும் 7 கோரிக்கைகளை முன்வைத்தே கடந்த 18ம் திகதி முதல் அடையாள வேலை போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.

கே.சுந்தரலிங்கம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here