லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை திரு இருதயநாதர் ஆலயம் மற்றும் லிந்துலை தபால் நிலையம் நேற்று இரவு இனந்தெரியாதோரால் உடைத்து நாசம் செய்யப்பட்டுள்ளதாக லிந்துலை பொலிஸ் தெரிவித்தனர்.
தலவாக்கலை டயகம பிரதான வீதியில் நாகசேனை பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸ் மேற்கொண்டு வருகின்றனர்
பா.பாலேந்திரன்