இங்கிலாந்து பிரதமர் இந்தியா விஜயம்!

0
17

இங்கிலாந்து பிரதமர் எதிர்வரும் 8 ஆம் திகதி இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

கடந்த ஜூலை 23, 24 ஆம் திகதிகளில் பிரதமர் மோடி இங்​கிலாந்து சென்​றிருந்​தார். அப்​போது இரு நாடு​களுக்கு இடையே தாராள வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தானது.

இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் 56 பில்​லியன் டால​ராக உள்ள இருதரப்பு வர்த்​தகத்தை 2030-க்​குள் இரட்​டிப்​பாக்​கு​வதை நோக்​க​மாகக் கொண்​டது.

இந்​தியா வரு​மாறு இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டாரமருக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்​தார். இந்த அழைப்பை ஏற்​றுக்​கொண்ட கீர் ஸ்டார்​மர், 2 நாள் அரசு முறை பயண​மாக வரும் 8-ம் திகதி இந்​தியா வரு​கிறார். கடந்த ஆண்டு பிரதம​ராக பதவி​யேற்ற பிறகு அவர் இந்​தியா வரு​வது இதுவே முதல் முறையாகும்.

இதுகுறித்து மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில்,

‘இந்​தியா வரும் இங்​கிலாந்து பிரதமர் கீர் ஸ்டார்​மர், 9-ம் திகதி பிரதமர் மோடியை மும்​பை​யில் சந்​தித்​துப் பேச உள்​ளார். இந்த சந்​திப்​பின்​போது, விஷன் 2035 என்ற 10 ஆண்டு திட்​டத்​தின் மூலம் இந்​தி​யா-இங்​கிலாந்து இடையே ஏற்​பட்ட கூட்​டாண்​மை​யின் முன்​னேற்​றம் குறித்து இரு தலை​வர்​களும் ஆய்வு செய்​வார்​கள்.” – என்று குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here