இதுவரை அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்காதவர்களுக்கு நிலுவையுடன் கொடுப்பனவு

0
105

இதுவரையில் அஸ்வெசும கொடுப்பனவுகளை பெறாத 4 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் நிலுவைத் தொகையுடன் முழுமையான கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய 04 மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.இம்மாவட்டங்களில் பயனாளிகள் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றவர்கள் அதிக அளவில் இடம் பெற்றுள்ளதாலும், இந்த மாவட்டங்களில் அதிக அளவு ஒதுக்கீடு இருப்பதால் இந்த பிரச்சினை எழுந்ததாக அமைச்சர் தெரிவித்தார்.

ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தப் பிரச்னைகள் அனைத்தும் சரி செய்யப்பட்டு ரூ. 2,500 கொடுப்பனவு வழங்கப்படும் என்றும், இந்த கொடுப்பனவானது, கடந்த ஜூலை 2023 முதல் இதுவரையான நிலுவைத் தொகையுடன் வழங்கப்படும் என அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here