ஏமனில் கொலை வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு எதிர்வரும் 16 ஆம் திகதி மரண தண்டனை நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏமனில் கடந்த 2017ஆம் ஆண்டு நடந்த ஒரு கொலை தொடர்பான வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
அவர் தற்போது ஏமன் தலைநகரான சனாவில் உள்ள மத்திய சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான மரண தண்டனை நிறைவேற்றப்பட ஒருவார காலம் உள்ள நிலையிலும் குறித்த தண்டனையில் இருந்து காப்பாற்ற வழி உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏமனில் ஷரியத் சட்டம் நடைமுறையில் இருப்பதால், கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்தினருக்கு ‘ப்ளட் மணி (Blood Money)’ எனும் இழப்பீட்டுத் தொகையை செலுத்தி மன்னிப்பு பெறுவதன் மூலம் மட்டுமே மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.