இந்திய விமான விபத்துக்கு ரணில் இரங்கல்!

0
5

இந்தியாவின் அஹமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த அனைவரினதும் குடும்பத்தாருக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள அறிக்கையில் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தான் ரஷ்யாவிற்கு சென்றிறங்கிய வேளையில் இந்த கவலையான செய்தியை கேட்டறிந்ததாகவும்  அது தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதெனவும் அந்த அறிக்கையில் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இந்த கவலைக்குரிய தருணத்தில் அனைத்து இந்தியர்களுடனும் இலங்கையர்களும் துயரத்தை பகிர்ந்துகொள்வர் என்றும் முன்னாள் ஜனாதிபதியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here