பாராளுமன்ற அமர்வு இன்று (15) காலை 09.30 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதுடன் 09.30 மணி முதல் மு.ப 10.00 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை 2022 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் (ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள்) இடம்பெறவுள்ளது.
இதன் பின்னர் 5.00 மணி முதல் 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணைக்கு அமைய சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான விவாதம் நடைபெறும்.