இன்றைய வெற்றி தோனிக்கு அளிக்கப்படும் பரிசு – ஜடேஜா..!

0
221

ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியுடனான போட்டியில் வெற்றி பெற்று அதனை தோனிக்கு சமர்பிப்போம் என ரவீந்தர ஜடேஜா தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற உள்ள போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோத உள்ளன.

இரண்டு அணிகளும் இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ள நிலையில், தலா இரண்டு வெற்றிகளை கைப்பற்றியுள்ளனர்.

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடி வருவதால், இந்த போட்டியை காண சென்னை ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

மேலும் இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தனது 200வது போட்டியில் தோனி விளையாட உள்ளார்.இதனால் இந்த போட்டியில் நிச்சயமாக சென்னை அணி வெற்றி பெற வேண்டும் என ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வரும் நிலையில், அதற்கு ஏற்ற கருத்து ஒன்றை CSK வீரர் ஜடேஜா வெளியிட்டுள்ளார்.

அதில் “நாளைய போட்டியில் நாங்கள் வெற்றி பெறுவோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவராக தோனி விளையாடும் 200வது போட்டியை வென்று அவருக்கு பரிசளிப்போம்” என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here