கடந்த 2023 ஆம் ஆண்டு இராணுவத்திற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டதற்காக சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியைச் சேர்ந்த 108 உறுப்பினர்களுக்கு பாகிஸ்தான் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஊழல் குற்றச்சாட்டில் இம்ரான்கான் நீதிமன்றத்தில் ஆஜரானபோது பாதுகாப்புப் படையினர் அவரைக் கைது செய்ததைத் தொடர்ந்து, மே 2023 இல் நாடு தழுவிய வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இப் போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கே தற்போது சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.