இரண்டு தேர்தல்களை ஒரே நாளில் நடத்த முடியாது

0
147

தேர்தல் நடத்தும் முறைமைக்கு அமைய ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சாத்தியமில்லை என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு மட்டுமே வழங்கப்படும். எனினும், பொதுத்தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என ஆணைக்குழுவின் அதிகாரி தெரிவித்துள்ளளார்.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்தி அதில் வாக்களிப்பது குறித்து நாட்டிலுள்ள வாக்காளர்களுக்கு சரியான தௌிவுபடுத்தல் இல்லாமை இதன் முக்கிய பிரச்சினையாக உள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்தது.

இவ்வாறான பல நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக தற்போது ஜனாதிபதி தேர்தலையும் பொதுத்தேர்தலையும் ஒரே நாளில் நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here