இந்தியாவின், ராமநாதபுரம் அருகே இலங்கைக்கு கடத்த முயன்ற 2,250 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் இலங்கைக்கு மிக அருகில் இருப்பதால் ராமநாதபுரம் மாவட்ட கடற்கரையில் இருந்து சமையல் மஞ்சள், சுக்கு, கஞ்சா, கடல் அட்டைகள், பீடி இலைகள் உள்ளிட்டவைகள் அதிக அளவு இலங்கைக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இன்று புதன்கிழமை (30) அதிகாலை ராமநாதபுரம் அடுத்த வெள்ளரி ஓடை கடற்கரையிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடல் வழியாக சட்டவிரோதமான முறையில் கடத்த இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் குநு கியூ பிரிவு பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது, லொறி ஒன்றில் இருந்து இலங்கைக்கு பீடி இலை பொதிகளை படகில் ஏற்றி கொண்டிருந்தபோது அவர்களை மடக்கிப் பிடிக்க முயன்ற போது கடலில் படகில் இருந்த இருவர் 10 மூட்டை பீடி இலை பொதிகளுடன் கடல் வழியாக தப்பியுள்ளனர்.
மேலும் பீடி இலை ஏற்றி வந்த லொறியை கைப்பற்றி கியூ பிரிவு பொலிஸார் இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் வெள்ளரி ஓடை பகுதியை சேர்ந்த நபரை பிடித்து ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்.
மேலும் கடல் வழியாக தப்பிச் சென்று மர்ம நபர்கள் இருவர் குறித்து கியூ பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.