டெல் அவிவில் உள்ள பென் குரியன் விமான நிலையம் மூடப்பட்டதையடுத்து சர்வதேச விமானங்கள் இஸ்ரேலுக்குள் நுழைய முடியாமையால் இலங்கையர்கள் ஜோர்தான் மற்றும் எகிப்து வழியாக பயண ஏற்பாடுகளைச் செய்யலாம் என்று இஸ்ரேலில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தூதுவர் நிமல் பண்டாரா உறுதிப்படுத்தியுள்ளார்.
இலங்கைக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் பயணிக்க விரும்புவோர் அந்தந்த நாடுகளிலிருந்து குறுகிய கால விசாக்களைப் பெற்று, ஈலாட் நகர் வழியாக இஸ்ரேலுக்குள் நுழையலாம் என்று தூதுவர் நிமல் பண்டாரா குறிப்பிட்டார்.
இஸ்ரேலில் உள்ள தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகளுடனான சந்திப்பின் போது, பென் குரியன் விமான நிலையத்தை மீண்டும் திறப்பதற்கான ஒரு குறிப்பிட்ட திகதியை உறுதிப்படுத்த முடியாது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் கிதியோன் சார் கூறியதாக தூதுவர் கூறியுள்ளார்.