இலங்கையில் பரவும் அபாயகரமான வைரஸ்

0
105

இலங்கையில் “டெங்கு 3” வைரஸ் தற்போது ஆதிக்கம் செலுத்துகின்றமை உறுதியாகியுள்ளது.

சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய சோதனைகளின்படி, நாட்டில் பல வருடங்களின் பின்னர் மீண்டும் “டெங்கு 3” வைரஸ் பரவி வருவதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

ஒருவருக்கு காய்ச்சல் இரு தினங்களுக்கு மேல் காணப்படுமாயின், டெங்கு பரிசோதனை நடத்துவதன் ஊடாக அதனை கட்டுப்படுத்த முடியும் என கொழும்பு மாநகர சபையின் பிரதம வைத்திய அதிகாரி வைத்தியர் ருவான் விஜயமுனி கூறியுள்ளார்.

“டெங்கு 3” வைரசுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியோ, ஆன்டிபயடிகளோ இல்லை எனக் கூறியுள்ள அவர், அதனால் இந்த வைரஸ் பரவும் அபாயம் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here