இலங்கை முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக அரசாங்க குடும்ப சுகாதார சேவை சங்கத்தின் தலைவர் தேவிகா கொடித்துவக்கு தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலைகளில் பதிவு செய்யப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை கடந்த 2024ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டும் குறைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பிறப்பு வீதமும் குறைந்துள்ளதாக அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.