இலங்கையில் வங்கி கடன் பெற காத்திருப்போர் குறித்து ஆய்வுகளில் வெளியான தகவல்

0
29

நாட்டில் பலர் கடன் பெற காத்திருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதென ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டத்தின் இலங்கை(Sri lanka) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா(azusa kubota) தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் அண்மையில் இலங்கையின் நிதி எழுத்தறிவு பாதை வரைபடத்தை வெளியிடும் நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், “நாட்டின் சனத்தொகையில் 34.4 வீதமானோர் கடன் தேவையினால் அவதியுறுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.இந்த நாட்டில் பெண்கள் மற்றும் இளைஞர் சமூகம் பொருளாதார ரீதியாக சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

இந்த நாட்டில் பெண்களுக்கு நிதி அறிவு மற்றும் நிதி தொடர்பான தகவல்களை வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது.கடன் மேலாண்மை, சமூக பாதுகாப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு நிதி கல்வியறிவு பற்றிய அறிவு மிகவும் முக்கியமானது” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here