இலங்கையில் 1300 கடந்த கொவிட்-19 மரணங்கள்…!

0
179

நாட்டில் கொவிட்-19 தொற்றினால் மரணித்தவர்களின் எண்ணிக்கை 1300 ஐ கடந்துள்ளது.

நேற்றைய தினம் 27 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 1325 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன், அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

41 முதல் 93 வயதுக்கு இடைப்பட்டோரின் மரணங்களே இவ்வாறு பதிவாகியுள்ளன.

நேற்று பதிவான 27 மரணங்களில், பெரும்பாலானவை கொவிட் நியூமோனியாவினால் ஏற்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here