இலங்கை கிரிக்கெட்டின் ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரியவை நியமிக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.
ஆலோசகர் பதவிக்காக ஜயசூரியவுக்கு 50 இலட்சம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வழங்கப்படும் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் சனத் ஜயசூரியவுக்கும் இடையில் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்று வருகின்றது.