இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (6) ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டிஇலங்கை நேரப்பபடி மாலை 5 மணிக்குத் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
அதன்படி, இன்றைய போட்டியில் இலங்கை வெற்றி பெற்றால், இன்னும் ஒரு போட்டி மீதமுள்ள நிலையில் போட்டியில் வெற்றி பெற முடியும்.
இலங்கை ஜிம்பாப்வேயில் விளையாடும் முதல் இருபதுக்கு -20 கிரிக்கெட் போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.