இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கை!! நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பெண்

0
4

உனவதுன பகுதியில் தனது பணப்பையை திருடிய சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கு அவுஸ்திரேலிய பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஜனவரி இரண்டாம் திகதி அதிகாலை உனவதுன கடற்கரையில் உள்ள உணவகத்திற்கு அருகில் இந்த திருட்டு நடந்துள்ளது.

குறித்த பெண்ணின் ஐபோன், வெளிநாட்டு நாணயம் மற்றும் வங்கி அட்டைகள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது.

பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் ஜனவரி நான்காம் திகதி உனவதுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாடு செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குள், பொலிஸார் சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.

தனியாக பயணம் செய்து இலங்கைக்கு வந்த பெண், பொலிஸாரின் உடனடி நடவடிக்கை மற்றும் சந்தேக நபரை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here