தலவாக்கலையில் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹொலிரூட் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் பிற்பகல் இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் 21 முதல் 24 வயதுகளுக்கிடைப்பட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் இருவருக்கு வெட்டுக் காயங்கள் காணப்பட்டமையினால் நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.