கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தோனேஷியாவில் கைதான இலங்கையர்களிடம் குற்றப் புலனாய்வுத் பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதன்போதே இஷாரா செவ்வந்தி டுபாய்க்கு தப்பிச் சென்றதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் சஞ்சீவ கொலை தொடர்பில் பல உண்மைகள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.




