இஸ்ரேலில் உள்ள இலங்கை தூதரகம் அமைந்துள்ள டெல் அவிவ் மற்றும் ஜெருசலேம் பகுதிக்கும் ஈரான் தொலைதூர ஏவுகணைகள் பலவற்றை ஏவியுள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஈரானுக்கு இடையிலான யுத்தம் சூடு பிடித்துள்ள நிலையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மேற்கொண்ட தாக்குதல் காரணமாக குறித்த பகுத்தியில் உள்ள விமான பாதுகாப்பு அமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதோடு குறித்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் தீப்பற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலுக்கு வருகை தரவிருந்த இலங்கையர்கள் தற்போது டுபாயில் காத்து கொண்டிருப்பதாகவும் அவர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தூதரக அதிகாரிகளின் நிலை குறித்து தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பதாகவும் உதவிகள் தேவைப்படுவோர் தூதரகத்திற்கு தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.