ஈரான் மீது நேரடி தாக்குதல்களை தொடங்கிய அமெரிக்கா!

0
3

அமெரிக்க இராணுவம் ஈரானில் மூன்று தளங்களைத் தாக்கியதாகத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

இது ஈரானின் அணுசக்தித் திட்டத்தைத் முறியடிக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் நடத்திய ஒரு வாரத்திற்கும் மேலான தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா இவ்வாறு நேரடியாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

தாக்குதலுக்குப் பிறகு, அனைத்து விமானங்களும் பாதுகாப்பாக திரும்புவதாகவும், இது அமைதிக்கான நேரம் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பதிவிட்டுள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்க தாக்குதல்களில் B-2 குண்டுவீச்சு விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை நேற்று (21) அமெரிக்காவின் B-2 குண்டுவீச்சு விமானங்கள் ரகசியமான முறையில் அமெரிக்காவின் குவாம் தீவிற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் அவை பயன்படுத்த பட்டிருக்கலாம் என்ற ஊகங்களும் எழுந்துள்ளன.

நிலத்துக்கு அடியில் உள்ள பதுங்கு குழிகளை உடைக்கும் குண்டுகளை சுமந்து செல்லக்கூடிய அமெரிக்காவில் உள்ள ஒரே விமானம் B-2 குண்டுவீச்சு விமானங்கள் என சொல்லப்படுகிறது.இந்த நிலையில் மேலும் ஈரானை தாக்குதலில் அமெரிக்கா இந்த விமானங்களைப் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணு ஆயுத உற்பத்தி முயற்சிகளை முறியடிக்கும் நோக்கில் இஸ்ரேல் சமீபத்தில் ஈரானை தாக்கத் தொடங்கியது.

இருப்பினும், குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, ஈரான் அணு ஆயுதங்களை தயாரிக்கத் தயாராக இல்லை என்றும் அதன் அணுசக்தி திட்டம் அமைதியான நோக்கங்களுக்காக மட்டுமே என்றும் ஈரான் கூறியுள்ளது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here