எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னர் உணவுப் பொதி மற்றும் தேநீரின் விலை குறைக்கப்படும் என சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை தற்போது குறைக்கப்பட்டுள்ளதாகவும், எரிவாயுவின் விலை எதிர்வரும் திங்கட்கிழமை குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.