உணவு சாப்பிடும் போது இடையில் அடிக்கடி தண்ணீர் குடிக்கலாமா?

0
242

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் தொப்பை வரும் என கூறப்படுவதுண்டு.உணவு சாப்பிடும் போது தண்ணீர் குடிப்பது என்பது பலரும் செய்யும் காரியம்.

சாப்பிடும் போது தண்ணீர் அருந்துவது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும்?

உணவுடன் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகளில் ஒன்று, உடல் எடையை அதிகரிக்கும். ஏனென்றால், இன்சுலின் அளவு அதிகரித்து, உணவு உடைக்கப்பட்டு கொழுப்பை ஏற்படுத்தும்.

உணவுடன் திரவங்களை குடிப்பது இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், இது வெறும் தண்ணீருக்கு மட்டும் பொருந்தாது. உங்கள் உணவோடு சாறு அல்லது சோடா குடிப்பதாலும் இந்த நிலை ஏற்படும்.

உணவின் போது அடிக்கடி தண்ணீர் குடிப்பது உமிழ்நீர் உற்பத்தியைக் குறைப்பதோடு அதன் செயல்திறனையும் குறைக்கிறது.

திரவமான பொருளை சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் மிக வேகமாக செரிமானம் அடைந்து விடும் என சொல்வார்கள். ஆனால் சாப்பிடும் போது திரவ பொருட்களை எடுத்து கொண்டால் அவை செரிமானத்தை வேகப்படுத்தாது.

சாப்பிடும் போது தண்ணீர் குடித்தால் தொப்பை வரும் என கூறப்படுவதுண்டு.ஆனால் இது முற்றிலும் உண்மை இல்லை, ஏனென்றால் உடல் வாட்டத்தை பொறுத்து இது மாறுபடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here