உருக்குலைந்த நிலையில் ஆணின் சடலம் மீட்பு

0
26

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிர்தௌவ்ஸ் பள்ளி வீதி  பிரதேசத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடொன்றின்   இரண்டாம்  மாடியில் இருந்து   அழுகி  உருக்குலைந்த  நிலையில்   ஆணின் சடலம் புதன்கிழமை (03)  மீட்கப்பட்டுள்ளது.

குறித்த நபர் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனவும் கடந்த 15 நாட்களாக காணாமல் போயுள்ள நிலையில் உறவினர்களால் தேடப்பட்டு வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நீண்ட காலமாக நிர்மாணிக்கப்பட்டிருந்த வீட்டின் 2 ஆம்  மாடியில் குறித்த நபர் சடலமாக கிடப்பதாக வீட்டின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

மனநிலை பாதிக்கப்பட்ட அவர்  சகோதரி ஒருவரின் வீட்டில் தங்கி இருந்த நிலையில் காணாமல் சென்றிருந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here