ஊடக சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல்: ஐதேக கண்டனம்!

0
99

ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் இடமளிக்காது என்று அக்கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்தார்.

“ ஊடகங்களுக்கு சுதந்திரமளிக்கும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில்தான் தேவையான சட்டங்கள் கொண்டுவரப்பட்டன. தகவல் அறியும் உரிமை சட்டத்தைக்கூட ரணில் விக்கிரமசிங்கவே கொண்டுவந்தார்.

மக்கள், அரசியல் பிரமுகர்கள் தவறிழைப்பது இயல்பு. ஆனால் அதனை ஊடகங்கள் சுட்டிக்காட்டும்போது திருத்திக்கொள்ள முற்பட வேண்டும். மாறாக ஊடகங்களை ஒடுக்குவதற்கு முற்படக்கூடாது.

எனவே, ஊடகங்களை அச்சுறுத்துவது பாரதூரமான விடயமாகும். இதற்கு ஐக்கிய தேசியக் கட்சி இடமளிக்காது.” – எனவும் வஜிர அபேவர்தன குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here