ஊதிய உயர்வு கோரிக்கைக்கு எதிர்ப்பு: புதிய தொழிலாளர்களுடன் பணிபுரிய தெலுங்கு தயாரிப்பாளர்கள் முடிவு

0
2

தெலுங்குத் திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு, 30 சதவிகித ஊதிய உயர்வு கேட்டு போராட்டத்தை அறிவித்துள்ளது. இதனால் ஆக.4-ம் தேதி முதல் திரைப்பட, சின்னத்திரை, வெப் தொடர் படப்பிடிப்புகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கையில், உயர்த்தப் பட்ட ஊதியத்தை வழங்குவதாகத் தயாரிப்பாளர்கள் உறுதியளித்து கூட்டமைப்புக்குக் கடிதம் கொடுத்தால் மட்டுமே, தொழிலாளர்கள் படப்பிடிப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் உத்தரவாதக் கடிதம் வழங்காத தயாரிப்பாளர்களின் படங்களில் பணிபுரியக் கூடாது என்றும் அறிவித்தது. இது தெலுங்கு திரைப்படங்கள் மட்டுமின்றி அங்கு நடக்கும் மற்ற மொழி திரைப்பட படப்பிடிப்புகளுக்கும் பொருந்தும் எனவும் கூறியிருந்தனர்.

இந்த கோரிக்​கையை தெலுங்கு திரைப்பட வர்த்தக சபை நிராகரித்து விட்​டது. இதுகுறித்து வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “தொழிற்​சங்​கங்​கள் கோரும் ஊதிய உயர்​வு, தெலங்​கானா மற்​றும் ஆந்​தி​ரா​வில் செயல்​படும் சிறு பட்​ஜெட் தயாரிப்​பாளர்​களால் ஏற்​றுக் கொள்ள முடி​யாத​தாக இருக்​கிறது. தற்​போதைய சூழ்​நிலை​யில் இது​போன்ற உயர்வை அவர்
​களால் தாங்க முடி​யாது. இதனால் இந்த உயர்வை அனைத்து தயாரிப்பாளர்​களும் எதிர்க்​கின்​றனர்.

தெலுங்கு திரைத்​துறை மற்ற மாநிலங்​களை விட தொழிலா​ளர்​களுக்கு அதிக ஊதி​யத்தை ஏற்​கெனவே வழங்கி வரு​கிறது. இதனால் நாங்​கள் ஒரு மனதாகத் தீர்​மானம் ஒன்றை எடுத்​துள்​ளோம். அதன்​படி, சங்​கங்​களில் இல்​லாத, திரைப்​படத் துறை​யில் ஆர்​வ​முள்ள தொழில் வல்​லுநர்​கள்​/தொழிலா​ளர்​களு​டன் பணிபுரிய தயாரிப்​பாளர்​கள் ஒப்​புதல் அளித்​துள்​ளனர்.

தொழிற்​சங்​கத்​தைப் பொருட்​படுத்​தாமல், நியாய​மான சம்​பளத்தை ஏற்​றுக்​கொண்டு பணி​யாற்​றும் தொழிலா​ளர்​களைத் தயாரிப்​பாளர்​கள் பயன்​படுத்​திக் கொள்​ளலாம். சினி​மா​வில் பங்​களிக்​கப் பல திறமை​யானவர்​கள் ஆர்​வ​முடன் இருக்​கின்​றனர்.

தயாரிப்​பாளர்​கள் இல்​லாமல் திரைப்​படத் துறை செயல்பட முடி​யாது. தெலுங்கு திரைப்​படத் துறை​யின் முன்​னேற்​றத்​துக்​குத் தயாரிப்​பாளர்​களின் நலனும் முக்​கி​யம் என்​ப​தைத் தொழிற்​சங்​கங்​கள் புரிந்​து​கொள்​ள வேண்​டும்​” என்​று கூறப்பட்டுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here