என் அம்மா அப்பாவை திட்டாதீர்கள், தோற்றது வீரர்களின் தவறு.. – ஷம்மி

0
50

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு ஏற்பட்ட தலைவிதியின் பின்னர் சமூக வலைத்தளங்களில் தன்னையும் தனது பெற்றோரையும் திட்டுவதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வா தெரிவித்துள்ளார்.உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு வழங்கப்படும் செலவீனமே இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால் போட்டியின் போது எடுக்கப்பட்ட சில முடிவுகளைக் கண்டு ஆச்சரியப்பட்டதாக அவர் கூறுகிறார்.

இருப்பினும், கிரிக்கெட் நிறுவனம் எவ்வளவு செலவு செய்தாலும், வீரர்கள் விளையாடுகிறார்கள், அந்த பொறுப்பு அவர்களையே சாரும் என்று கூறுகிறார்.

இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்வதற்கும், எதிர்வரும் போட்டிகளில் வெற்றியீட்டுவதற்கு அவர்களை தயார்படுத்துவதற்கும் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here