சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்படவுள்ளதாக வாழ்க்கைச் செலவு குழு அறிவித்துள்ளது.
அதன்படி நாளை நள்ளிரவு முதல் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாவு சிலிண்டரின் விலை 158 ரூபாவால் அதிகரிக்கப்படவள்ளது. எனவே விலை அதிகரிப்பின் அதன் விற்பனை விலை 1,696 ரூபாவாகக் காணப்படும்.
உலக சந்தையில் 469.50 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட எரிவாயு விலை தற்போது 590.05 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்களின் கோரிக்கைகளுக்கு அமைய இவ்விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது இவ்வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது விலை அதிகரிப்பாகும். கடந்த ஏப்ரல் மாத்தில் 245 ரூபாவால் விலை அதிகரிகரிப்பட்டது. பின்னர் ஜூன் மாதம் 138 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு தற்போது மீண்டும் 158 ரூபாவால் விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.