இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று வியாழக்கிழமை நடந்த விமான விபத்து உலகின் மிக மோசமான விமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.
இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, அதில் பயணித்த சில பயணிகளின் இறுதி நினைவுகள் இப்போது வெளியாகி வருகின்றன.
இதன்படி, பிரதிக் ஜோஷி மற்றம் அவரின் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று குழந்தைகள் மற்றும் மனையுவிடன் லண்டன் நோக்கிச் சென்ற போது ஜோஷி விபத்தை எதிர்நோக்கியிருந்தார்.
மென்பொருள் நிபுணரான ஜோஷி, ஆறு ஆண்டுகள் லண்டனில் வசித்து வந்தார். லண்டனில் தனது மூன்று குழந்தைகள் உட்பட தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை வழங்க கடுமையாக உழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.
ஆறு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பின்னர், அவர் இறுதியாக நேற்று குறித்த விமானத்தில், தனது அன்புக்குரிய குடும்பத்தை லண்டனுக்கு அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
இந்தியாவில் வைத்தியராக பணியாற்றிய அவரின் மனைவியும் இந்த பயணத்திற்காக தனது வேலையும் கைவிட்டிருந்தார்.
உதய்பூரில் உள்ள பசிபிக் மருத்துவமனையில் வைத்தியராக பணிபுரிந்து வந்தார், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வேலையை இராஜினாமா செய்திருந்தார்.
அவர்களின் மூன்று குழந்தைகள் ஐந்து வயது இரட்டை ஆண் குழந்தைகளும் எட்டு வயது மகள்களும் ஆவர்.
புதிய வாழ்க்கைக்கான அனைத்து நம்பிக்கைகளுடனும் விமானத்தில் ஏறிய ஜோஷி தம்பதியினர், தங்கள் மூன்று குழந்தைகளுடன் இறுதியா ஒரு செல்ஃபி புகைப்படத்தையும் எடுத்திருந்தனர்.
இருப்பினும், அது அவர்கள் எடுக்கும் கடைசி செல்ஃபியாக இருக்கும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.
பேரழிவு தரும் துயரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புன்னகையால் நிரம்பிய செல்ஃபி, இன்று உலகப் புகழ்பெற்ற புகைப்படமாக மாறியுள்ளது.
ஜோஷி குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட விமானத்தில் இருந்த 241 பயணிகளும் விமான விபத்தில் இறந்தனர்.
துரதிர்ஷ்டவசமான விபத்துக்கு முன்பு, ஜோஷி குடும்பம் இலங்கைக்கும் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.