ஹைலன்ஸ் கல்லாரிக்கு ஆறுமுகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 1 ஏக்கர் வரையிலான காணிக்கு இனந்தெரியாதவர்களால் தீ வைப்பு.
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட ஹட்டன் ஹைலன்ஸ் ஆரம்ப்பிரிவு பாடசாலைக்கு இலங்கை தொழிலாளர் காங்ரசின் தலைவரும் அதன் பொதுச்செயலாளருமான ஆறுமகன் தொண்டமானால் பெற்று கொடுக்கபட்ட 1 ஏக்கர் காணிக்கு இனந்தெரியதாவர்களால் தீ வைக்கபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர் .
இந்த சம்பவம் 21.02.2018புதன் கிழமை 01.30 மணி அளவில் தீவைக்கபட்டுள்ளதோடு குறித்த கல்லாரியின் பக்கம் தீ பரவி வந்த போதிலும் ஹட்டன் டிக்கோயா நகரசபை ஊழியர்கள் இணைந்து தீயை கட்டுபாட்டுக்கு கொண்டுவந்துள்ளதாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயனைக்கும் படையினர் தெரிவித்தனர் .
குறித்த பகுதியில் தேயிலையும் மானாவும் காணபட்ட பகுதிக்கே தீ கைபட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.
மு.இராமச்சந்திரன், எஸ்.சதீஸ்