ஒன்றரை இலட்சத்துக்கு கிட்டிய தொகையினர் வௌிநாடு பயணம்!

0
4

2025 ஜனவரி முதல் ஜூன் மாதம் வரையிலான  6 மாதங்களில் 1,44,000 (1 இலட்சத்தி 44 ஆயிரம்) பேர் தொழிலுக்காக வெளிநாடு பயணித்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.

88,684 ஆண்கள்  55,695 பெண்கள், ஆகக்கூடுதலான 38, 806 பேர் குவைத் நாட்டுக்கே சென்றுள்ளனர்.துபாய் நாட்டுக்கு 28,973 பேர், 21,958 பேர் கட்டார், சென்றுள்ளனர்

அதேவேளை ஜப்பான் 6073 பேர்,  தென்கொரியாவுக்கு 3134 பேர்,  கடந்த 6 மாத காலங்களில் இலங்கையர்  வெளிநாட்டுக்குச் சென்று 3.73 பில்லியன் டொலர்களை அந்நியச் செலாவணியை உழைத்து அனுப்பியுள்ளனர் இதன் படி 2025 ஆம் ஆண்டு இறுதியில் 7 பில்லியன் அமெரிக்க டொலர் பணப்பரிமாற்ற வருவாயை இலங்கை பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here