ஒமிக்ரோன் அச்சுறுத்தல் – மிகமோசமான நிலையை எதிர்கொள்ள இலங்கை தயாராக வேண்டும்!

0
220

புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரோன் திரிபு ஏனைய திரிபுகளை விடவும் வீரியம் கூடியதாக இருக்குமாயின் இலங்கையின் தற்போதைய நிலவரம் எதிர்வரும் காலங்களில் மிக மோசமடையக்கூடும் என சுகாதாரக் கொள்கைகளுக்கான நிலையத்தின் தலைவர் வைத்திய நிபுணர் ரவீந்திர ரன்னன் எலிய சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே மிகமோசமான நிலையைக் கையாள்வதற்கு இப்போதிருந்து தயாராக வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.

அதன் ஓரங்கமாக வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கான பயணக்கட்டுப்பாடுகளை விதித்தல் தொடர்பில் உடனடியாக அவதானம் செலுத்தப்பட வேண்டும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here