இலங்கையில் கொவிட்-19 நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2000ஐ கடந்துள்ளது. மேலும் 101 பேரின் மரணங்கள் குறித்த உறுதிப்படுத்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ளது.
இதன்படி இலங்கையில் இதுவரையில் கொவிட்19 நோயினால் 2011 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பணிமனை அறிவித்துள்ளது.
அதேநேரத்தில் இதுவரை காலத்தில் இலங்கையில் ஒரே சமயத்தில் பதிவான அதிகூடிய கொவிட் மரண எண்ணிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 10 நாட்களில் இலங்கையில் 527 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.