ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பிலான ஜனாதிபதி செயலணிக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் உறுப்பினரான கருணாகரன், பிரதமரின் இணைப்பு செயலாளர் செந்தில் தொண்டமானை பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறுபொருளாதார பயிர்செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சில் சந்தித்து கலந்துரையாடினார்.
ஒரே நாடு ஒரே சட்டத்தின் ஊடாக சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக முன்னுரிமையளிப்பது குறித்து இதன்போது இருவரும் கலந்துரையாடினர்.