இரண்டாவது விக்கெட்டுக்காக இந்த இருவரும் 92 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்தனர். இது பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த பார்ட்னர்ஷிப் ஆகும். இந்த அபாரமான பார்ட்னர்ஷிப் பெங்களூரு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி, டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ரன் சேஸை பதிவு செய்ததுடன், இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. மேலும், ஒரே நேரத்தில் ஐபிஎல் மற்றும் டபிள்யூ.பி.எல் கோப்பைகளை வைத்திருக்கும் முதல் அணியாக பெங்களூரு புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போது ஐபிஎல் கோப்பையும் பெங்களூரு அணியிடம் உள்ளது குறிப்பிடத்தக்கது.