ஒரே நேரத்தில் 30 பேரை காவு வாங்கிய கோர விபத்து – பாகிஸ்தானில் நடந்த சம்பவம்

0
165

பாகிஸ்தான் நாட்டின் கில்கித் – பல்திஸ்தான் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 30 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கில்கித்தில் இருந்து ராவல்பெண்டி நோக்கி நேற்று இரவு பயணிகள் பேருந்து சென்று கொண்டிருந்தது.

டைமிர் மாவட்டம் ஷதில் பகுதியில் மலைப்பாங்கான சாலையில் குறித்த பேருந்து சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த மகிழுந்து மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த கோர விபத்தில் பேருந்தும், மகிழுந்தும் மலையில் இருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விழுந்தது.

குறித்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 30 பேர் உயிரிழந்தனர். மேலும் ,படுகாயமடைந்த பலர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த கோர விபத்து தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here