காசாவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய சரமாரி தாக்குதல்களில் கடந்த 24 மணி நேரத்தில் 90 பேர் பலியாகியுள்ளனர். அத்தோடு, குறித்த தாக்குதலினால் மேலும் 177 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதன்காரணமாக இஸ்ரேல் போரினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்து 410 ஆக அதிகரித்துள்ளது.அதேவேளை, இதுவரை சுமார் 71 ஆயிரம் பேர் படுகாயம் அடைந்துள்ளதாக பலஸ்தீனிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.




