ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல்

0
364

இலங்கையில் ஓய்வூதியம் வழங்குவதில் 2028 அல்லது 2030 ஆம் ஆண்டுக்குள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும் என ஓய்வூதியத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஓய்வூதியத் திணைக்கள அதிகாரிகளுடன் நடைபெற்ற குழுக் கூட்டத்தில் இந்தத் தகவல் தெரியவந்ததாக எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

எதிர்காலத்தில் ஓய்வூதிய கொடுப்பனவு நெருக்கடி ஏற்படுமா என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பியதற்கு, அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here