கந்தப்பளை கோர்ட்லோஜ் மலை உச்சியில் அமைந்துள்ள பழமையான இந்த கோவில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது.
இந்த கோவிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஐம்பது ஆயிரம் ரூபாய் பெருமதியான மின்குமிழ்கள் நேற்றைய தினம் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

பொதுமக்களின் புகாரை தொடர்ந்து கந்தப்பளை காவல்துறையினர் கோவில் மின்குமிழ்களை திருடிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இது போன்ற திருட்டு சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக அனைத்து கோவில்களிலும் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
டி.சந்ரு .திவாகரன்



