கனடாவில் கோர விபத்து – உயிருக்கு போராடும் பாதசாரிகள்

0
174

கனடாவின் ஆம்கியூவில் லொறி ஒன்று ஏற்படுத்திய விபத்தில் பாதசாரிகள் பலர் படுகாயமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கியூபெக் மாகாணத்தில் உள்ள ஆம்கியூ நகரில், பிற்பகல் மூன்று மணியளவில் அதிவேகமாக வந்த லொறி ஒன்று பாதசாரிகள் மீது பலமாக மோதியது.

இதில் பலர் படுகாயமடைந்ததாகவும், அவர்களில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கோர விபத்தில் ஆறு அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

லொறியை இயக்கிய சாரதியை கைது செய்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here