பொகவந்தலா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டின்சின் பிரதேச சபைக்கு அருகாமையில் வீதி அபிவிருத்தி பணியில் ஈடுபட்டிருந்த போது பாரிய கல்லொன்று உருண்டு மாணவன் ஒருவன் மீது பட்டதில் கடும் காயங்களுக்கு உள்ளான மாணவன் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் இன்று பகல் 12.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
டீன்சின் தோட்டத்தில் தேயிலையில் வேளை செய்து கொண்டிருந்த தாய்க்கு உதவிக்காக சென்ற மாணவனே குறித்த விபத்துக்குள்ளாகியுள்ளார்.
குhயமடைந்த மாணவன் 1990 அவசர நோய் காவு வண்டியின் மூலம் கொண்டு சென்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நோர்வூட் பொகவந்தலா வீதி காபட் இட்டு அபிவிருத்தி செய்வதற்காக குறித்த வீதியினை அகலப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்து ஜேசிபி மண்ணை வெட்டி அகற்றும் போது பாரிய கல் உருண்டு போய் உள்ளது.
முதல் கல்லினை சாரதி தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் இரண்டாவது கல்லினை தடுப்பதற்கு முன் கல் உருண்டோடியதாகவும் சம்பவத்தினை நேரில் கண்டோர் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக ஜேசிபி யின் சாரதி பொகவந்தலாவை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஹட்டன் கே.சுந்தரலிங்கம்