நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் அழைக்குமாறு அதிபர் ரணில் விக்ரமசிங்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) நாடாளுமன்றில் வைத்து அறிவித்துள்ளார்.
நாட்டின் பாதுகாப்பிற்காக இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.
நாற்பதாவது அதிகாரம் கொண்ட பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் 12ஆவது பிரிவின் படி, வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய அதிபர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.