காட்டுப்பகுதியில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் கண்டுபிடிப்பு

0
184

கம்பளை அம்புலுவா சரணாலய காட்டுப்பகுதியில் மூன்று நாட்களாக நிர்வாணமாக அலறிக் கொண்டிருந்த பெண் ஒருவரை கம்பளை தலைமையக காவல்துறையினர் இன்று கண்டுபிடித்துள்ளனர்.

மூன்று நாட்களாக ஒதுக்கப்பட்ட வனப்பகுதி வழியாக அவ்வப்போது பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டதை அடுத்து உள்ளூர்வாசிகள் குழு, ஒதுக்கப்பட்ட வனப்பகுதிக்குள் சென்று விசாரித்தது.

இதன்போது ஒரு பெண் உடலில் ஒரு துணி கூட இல்லாமல் இருப்பதைக் கண்ட பிரதேசவாசிகள் குழுவொன்று கம்பளை தலைமையக காவல்துறைக்கு இது தொடர்பில் அறிவித்துள்ளனர்.

கம்பளை தலைமையக காவல்துறையின் பெண் உத்தியோகத்தர்கள் குழுவொன்று வந்து அந்த பெண்ணுக்கு ஆடை அணிவித்து தமது காவலில் எடுத்துச் சென்றுள்ளனர்.

காவல்துறை உத்தியோகத்தர்களால் கொண்டு செல்லப்பட்டபெண் கம்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பிரதேசத்தின் சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த பெண்ணின் அடையாளத்தை கண்டறிய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here