மவுஸ்ஸாகலை நீர்த்தேக்கத்தில் இருந்து நேற்று மாலை ஆணொருவரின் சடலம், மீட்கப்பட்டுள்ளது.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரவுன்லோ பகுதியை சேர்ந்த வேலு மருதமுத்து (55) நேற்று முன்தினம் காலை முதல் காணாமல் போயிருந்தார்.
இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், தேடுதல் ஆரம்பமானது.
இந்நிலையிலேயே இன்று அவர் கடற்படை சுழியோடிகளால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.