இரவு நேரங்களில் தனது 14 வயது காதலியின் வீட்டுக்குள் இரகசியமாக புகுந்து துஷ்பிரயோகம் செய்து வந்த காதலன் நித்திரைக் கொண்டதால் மாட்டிக்கொண்ட சம்பவமொன்று கொட்டகதெனிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த 14 வயது யுவதியின் பெற்றோர் சண்டையிட்டுக் கொண்டு பிரிந்து தனித்தனியாக வாழ்க்கை நடத்துகின்றனர். இந்த யுவதி அண்ணனின் மனைவியுடன் (அண்ணி) அவர்களது வீட்டில் வசித்து வருகிறார்.
காதலன் பல சந்தர்ப்பங்களில் அண்ணிக்குத் தெரியாமல் இரகசியமாக வீட்டில் புகுந்து தனது காதலியுடன் சல்லாபம் செய்து வந்துள்ளார்.
பின்னர் அண்ணி விழித்துக் கொள்வதற்கு முன்னர் அதிகாலை வீட்டை விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.
இருந்தும் அன்றைய தினம் காதலியின் வீட்டுக்கு வந்த காதலன் காதல் போதையில் நித்திரை கொண்டதால் – அண்ணி நித்திரையிலிருந்து எழுவதற்கு முன்னர் வீட்டைவிட்டு செல்ல முடியாமல் போயுள்ளது. இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததையடுத்து இந்த காதலன் கொட்டகதெனிய பொலிஸாரால் கடந்த 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.