காலணி வவுச்சருக்கான காலம் நீடிப்பு!

0
8

25 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் இம்மாதம் 20 ஆம் திகதி வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,

“2025 ஆம் ஆண்டுக்கான பாடசாலை மாணவர்களுக்கு காலணி வழங்குவதற்கான வவுச்சரின் செல்லுபடியான காலம் 2025 பெப்ரவரி 28 ஆம் திகதியுடன் முடிவடைந்திருந்த நிலையில், வவுச்சரின் செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, பாடசாலை மாணவர்களுக்கு காலணிகளை வழங்குவதற்கான வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் 2025 மார்ச் 20 வரை நீட்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here